தாய்பாலை யாரெல்லாம்..? தானம் செய்யலாம்.
குழந்தை பிறந்தபின் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்பால் சுரக்காது, சிலர் மற்றொருவரின் தாய்ப்பாலை தான் குழந்தைக்கு தர நினைப்பார்கள். அப்படி கொடுப்பது சரியானது, இதனால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமா என்பது பற்றி பார்க்கலாம்.
சுக பிரசவம் ஆனா பெண்களுக்கு சில மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும். ஆனால் சிஸேரியன் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு மயக்கம் தெளிவதற்கு தாமதம் ஆகும். அந்த நேரத்தில், குழந்தை பசி என்றும் அழும் பொழுது உடன் இருப்பவர் மாற்றொருவரிடம் தாய்பாலை கடன் வாங்குவார்கள். அல்லது குழந்தையை அவர்களிடமே கொடுத்து தாய்ப்பால் கொடுக்க சொல்லுவார்கள்.
ஒரு சில குழந்தைகள் தாயை தவிர மற்றவரின் தாய்பால் விரும்பாது, ஒரு சில குழந்தைகள் பசி என்று குடித்துவிடும் இதனால், நோய்தொற்று அதிகமாகும்.
ஒரு சிலர் தைராய்டு மாத்திரைகள் எடுத்து இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது அந்த தொற்று குழந்தையை பாதிக்கும்.
இது அவர்களுக்கு பிறந்த குழந்தையை பாதிக்காது காரணம் கருவில் இருக்கும் பொழுது, இவர்கள் எடுத்துக் கொள்ளும் தைராய்டு மாத்திரை குழந்தையின் உடலில் ஊறி விடும். எனவே அவர்களை அது பாதிக்காது.
இதனால் தாய்ப்பால் என்று கேட்டு உதவியை நாடும் பொழுது அவர்களிடம் சென்று, உங்களுக்கு ஏதாவது தொற்று உள்ளதா என்று எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க முடியாது.
பிறந்த குழந்தை தாய்ப்பாலுக்கு அழுகிறது என்றால், மருத்துவ மனையில் தாய்ப்பால் தானம் நிறைய பேர் கொடுத்து இருப்பவர்கள். அவர்களை முழுவதுமாக பரி சோதித்துதான், மருத்துவர்களும் தாய்ப்பால் பெற்று இருப்பார்கள்.
எனவே மருத்துவர்களிடம் பரிந்துரைப்படி இருக்கும் தாய்ப்பால் களை குழந்தைக்கு கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் பற்றிய தகவல்கள் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி