ஈசியாக நீங்களும் சமையல் ராணி ஆகலாம்..!
மசாலா குருமாக்களில் காரம் அதிகமாகிவிட்டால் அதனை நீக்க தேங்காய் பால் அல்லது தயிர் கலந்தால் குருமாவில் காரம் சரியாகிடும்.
அவலை வெறும் வாணலில் வறுத்து அரைத்து பின் அதை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றினால் தோசை நல்லா மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
ஸ்வீட்டின் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க அதன் மீது சிறிது தேன் தடவி வைக்கலாம்.
மட்டன், சிக்கன் வறுவல் செய்யும்போது அதன் மேல் உள்ள மசாலா உதிராமல் இருக்க சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து செய்யலாம்.
சூப் செய்யும்போது சிறித் அவல் வறுத்து பொடியாக்கி அதில் சேர்த்தால் சூப்பராக இருக்கும்.
பாகற்காய் குழம்பில் இரண்டு துண்டு மாங்காய் சேர்க்க கசப்பு தெரியாது சுவையும் கூடுதலாக இருக்கும்.
குருமாவில் தேங்காய் ஊற்றுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து சேர்த்தால் கெட்டியான குருமா கிடைக்கும்.
தோசை கல்லில் ஒட்டாமல் சுட இரண்டு ஸ்பூன் சோள மாவுடன் சிறிது தன்ணீர் சேர்த்து கரைத்து அதனை மாவில் கலந்து தோசை சுடலாம்.
வெள்ளரிக்காய் சூப் செய்யும்போது வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து சேர்க்கலாம்.
பால் பாயாசம் செய்யும்போது பாலை அப்படியே சேர்க்காமல் மிக்ஸியில் ஊற்றி அடித்து நுரையுடன் செய்தால் பாயாசம் கெட்டியாக வரும்.
அலுமினிய பாத்திரத்தின் உட்புறத்தில் கருப்பாக இருந்தால் சிறிது வினிகர் தடவி 15 நிமிடம் ஊறவைத்து சிறிது நீர் ஊற்றி கொதிக்க வைத்தால் கறை நீங்கிடும்.