இரத்த காடாக மாறும் மேற்கு வங்கம்..!! 697 மையங்களில் மீண்டும் வாக்குபதிவு..!!
மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த 1970ம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90% இடங்களில் மற்றும் மாவட்ட ஊராட்சிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
அதில் போட்டியிட்டு வென்றவர்களின் ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிவடைய போகும் நிலையில் ஜூலை 8ம் தேதி மேற்கு வங்கம் மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.., இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், இடது சாரிகள் காங்கிரஸ், பாஜக ஆகிய காட்சிகள் போட்டியிட்டுள்ளன.
அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே வன்முறை வெடித்துள்ளது, தேர்தல் பிரச்சாரங்களின் போது கட்சியினர் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வன்முறையில் 18 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே 8ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் மத்திய தேர்தல் வாக்குபதிவு தொடங்கியுள்ளது. பாதுகாப்பு பணியில் 65,000 துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேற்கு வங்க காவல் துறையினர் சார்பில் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. கூச்பெகார் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகளை தூக்கி போட்டு உடைத்து, வாக்குச்சாவடிக்கு தீ வைத்து பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றதால் பலரும் வாக்களிக்க செல்லாமல் இருந்துள்ளனர்.
கர்கிராம், ரெஜிநகர், துஃபான்கஞ்ச் ஆகிய பகுதிகளில் தங்கள் கட்சி தொண்டர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தொம்கோல் பகுதிகளில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும் அக்கட்சியினர் கூறினர். பாஜக, காங்கிரஸ், மார்கிஸ்ட் கட்சியினர் கூட்டு சேர்த்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள மத்திய படைகள்.., பாதுகாப்பிற்கு உதவாமல் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்களுக்கும் வாக்குச்சாவடி களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில்.., மத்திய படைகள் தோல்வி அடைந்துவிட்டனர். எனவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
அதைபோல் பிர்கச்சா என்ற பகுதியில் அப்துல்லா என்ற சுயேட்சை வேட்பாளரும் பூத் ஏஜென்ட் என்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் முன்னா பிபி ஆதரவாளர்களால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
இதுபோன்று பல இடங்களில் நடந்த வன்முறையில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 37 ஆக உயர்ந்துள்ளது. அதில் 20 பேர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது. இந்த வன்முறை சம்பவத்தால் பல இடங்களில் வாக்குபதிவுகள் நிறுத்தப் பட்டுள்ளன. பல வாக்குச்
சாவடிகளில் கள்ள ஓட்டுகளும் போட பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே நிறுத்தப்பட்ட 697 வாக்குசாவடிகளில் இன்று மீண்டும் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.., இந்த முறை வன்முறைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்திய படி வாக்களிப்பபவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
Discussion about this post