இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம், அதற்குள் பிரமோஸ் ஏவுகணையை கொண்டு தாக்கி விட்டனர் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அசர்பைஜான் நாட்டிலுள்ள லாச்சின் பாகிஸ்தான்,துருக்கி, அசர்பைஜான் நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது, இந்தியா தாக்கியதையடுத்து மே 10 ம் தேதி 4.30 மணியளவில் இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க முடிவு செய்தோம். இந்த சமயத்தில்தான் இந்தியா பிரமோஸ் ஏவுகணையை பாகிஸ்தானின் பல நகரங்கள் மீது ஏவியது. ராவல் பிண்டி விமானப்படை தளத்தையும் பிரமோஸ் தாக்கியது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்தியாவுடன் வர்த்தகம், காஷ்மீர், தண்ணீர் விவகாரம் குறித்து பேச்சு நடந்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியாவோ, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று கறாராக கூறி விட்டது. மேலும், பாகிஸ்தானிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளின் பெயர் பட்டியலில் உள்ளவர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே பேசசுவார்த்தை பற்றி யோசிக்கலாம் என்றும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.