நம் முன்னோர்களுக்கு உள்ள அறிவு நமக்கு இல்லையே..?
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை சொன்னாலும், எதை செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். நமக்கு இருக்கும் அறிவை விட அவர்களுக்கு அறிவு அதிகம்..
அவர்களின் அறிவு பற்றி சில பதிவுகளை பார்க்கலாம்..,
இந்த காலத்தில் மனிதனின் வேலையை சுலபமாக்க, எதை தொட்டாலும் மிஷின்.., ஆனால் அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க..?
ஒரு கிணறு அமைப்பது ஒன்றும் எளிதான காரியமில்லை. பலரும் சேர்ந்து அதற்காக உழைத்திருக்க வேண்டும்.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இவற்றுக்கெல்லாம்
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி..?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்கும்.
அப்படி இருந்தால் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய்மையான தண்ணீர் கிடைக்கும். என சொல்லி இருக்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடும் .
அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்கும். அந்த இடத்தில் கிணறு தோண்றினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்கும் என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இப்போது புரிகிறதா நமக்கு இருக்கும் மூளை எப்படி மிஷின் மூலம் அனைத்தையும் செய்து முடித்து நேரத்தை மிச்சப்படுத்தி பணத்தை செலவு செய்யலாம் என யோசிப்போம். ஆனால் நம் பெரியோர்கள் மூளையை சிந்தித்து அடுத்த தலைமுறை வரை எப்படி நலமாக வாழ வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.
– வீர பெருமாள் வீர விநாயகம்