வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை வழிபாடு
ராமநாத புரத்தில் உள்ள, உத்தரகோசைமங்கை கோவிலில் வளர்பிறையை முன்னிட்டு மூலவர் அம்மன் உட்பட, பிரகாரத்தில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகத்தை தொடர்ந்து வராகி அம்மனுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு, தீப ஆராதனை நடைபெற்றது. இந்த வளர்பிறை பூஜையில் ஏராளமான பெண்கள் கோவில் வளாகம் வெளியே, மஞ்சள் அரைத்து பூஜை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
நேர்த்திக்கடனை முடித்துவிட்டு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று .., சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.