விழுப்புரம் வைகுண்ட வாசப்பெருமாள் வீதி ஊர்வலம்..!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைகுண்டேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 25ம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாளில் இருந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து நேற்று இரவு ஹனுமந் வாகனத்தில் வீதி உலா வந்துள்ளார். இந்த வீதி உலாவில் ஏராளமானோர் தீப ஆராதனை செய்து வழிபட்டனர்.
ஜூன் 1ம் தேதி மாலை.., வைகுண்ட பெருமாளுக்கு திருக் கல்யாணம் நடக்க இருப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த திருக் கல்யாணத்தில் திருமணம் ஆகாதவர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தால்.
விரைவில் திருமணம் ஆகும் என்பது உண்மை. எனவே திருமணம் ஆகாதவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post