பட்ஜெட் உரையை கிழித்தெறிந்து வைகோ எதிர்ப்பு..!!
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த பத்து ஆண்டு காலமாக ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், 18வது மக்களவைத் தேர்தல் முடிந்ததும், தனிப் பெரும்பான்மை பலத்தை இழந்த பாஜக கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
எனவே ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற “வைகோ” மத்திய பட்ஜெட்டை கண்டித்தும்., நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.. அப்போது தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக., பட்ஜெட் உரையை கிழித்தெறிந்து வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..