ஒன்றிய அரசை வலியுறுத்தும் வைகோ..!! கர்நாடகாவிற்கு கண்டனம்..!!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசின் நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு, மேகதாது அணை திட்டத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்றும், இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் விவரிப்போம், என்று கூறி இருந்தார். இதே கருத்தை மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் முன் வைத்து உள்ளது.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்.. மேகேதாட்டு அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருவது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து முற்றாக பாதிக்கப்படும் என்றும், வறட்சிக் காலங்களில் நீர் பங்கீடு குறித்து காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் தெளிவான உத்தரவை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்தின் விவசாய தேவைக்காக கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து நவம்பர் 23-ம் தேதிவரை விநாடிக்கு 2 ஆயிரத்து 600 கன அடி நீரை திறந்துவிட உத்திரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள் வைகோ, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக மாநிலம் காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசின் நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post