பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி விசாக திருவிழா..!
பழனியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை 11:40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில் சூரியன், சேவல் மற்றும் மயில் என கொடிகளை ஏற்றினர்.
நாளை பல்லக்கில் வெள்ளி மயில் கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு தங்க குதிரையில் ஊர்வலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி , மற்றும் ஆய்வாளர் நடராஜன் ஏற்பாடு செய்துள்ளார்.
பல பக்தர்கள் இன்றே கொடியேற்றத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். தற்போது விடுமுறைக் காலம் என்பதால் நாளை இன்னும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று மேலும் போலீஸ் பபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ. லோகேஸ்வரி.