சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிடலாம்.
இதற்காக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ரூ.139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. மைதானத்தின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதில் நீர்நிலை, நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் செய்யக்கூடாது. மேலும் அங்கு மரங்களை வெட்ட அனுமதியில்லை எனவும், அருகில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்ற நிபந்தனையை தமிழக அரசு விதித்திருக்கிறது.