திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தியாகராஜர் உற்சவம்
சென்னை திருவொற்றியூர் கோவிலில் வடிவுடையம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. அங்கு வடிவுடையம்மன் மட்டுமின்றி தியாகராஜர், சிவன், குழந்தை வரும் தரும் விநாயகர், பாலமுருகன் என அனைவருக்கும் கோவில் அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும் ஒவ்வொரு ராசி, நட்சத்திரங்களுக்கும் அதற்கு ஏற்ற பரிகாரங்கள் செய்யும் வகையில் சிவன் வழிபாடு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இக்கோவிலில் உள்ளது.
ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை மாதத்தில், 15 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டும் மே 5ம் தேதி தியாகராஜ சுவாமிக்கு வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. சனி மற்றும் புதன் கிழமைகளில் தியாகராஜர் வீதி உலா வருவார்.
மற்ற நாட்களில் உற்சவம் நடைபெறும், அதன்படி நேற்று முன்தினம் இரவு, தியாகராஜர் சுவாமி பூ அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்து அருள் பாளித்தார். பின் கோவிலை சுற்றியுள்ள நான்கு தெருக்களில் மட்டும் வீதி உலா சென்றார்.
பின் புறம் உள்ள வசந்த தீர்த்த குளத்தை சுற்றி ஒன்பது முறை ஒய்யாரமாக நடனம் ஆடினார். நடனம் ஆடும் பொழுது சுவாமியின் மேல் வண்ண மலர்கள் தூவப்பட்டன. வாரி இறைக்கப்பட்ட பூக்களை மக்கள் பிரசாதமாக எடுத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து வருகிற மே 19ம் தேதி தியாகராஜ சுவாமிக்கு மாடவீதி உற்சவத்துடன், திருவிழா நிறைவு பெற உள்ளது.
விழாக்களுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷ்னர் பாஸ்கர் மற்றும், கோவில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற பல திருத்தலங்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post