அமாவாசை நாளில் தெரிந்துகொள்ளவேண்டியது..!! இன்று சந்திராஷ்டமம் யாருக்கு..?
இன்று அமாவாசை இந்த நாளில் நம் செய்ய வேண்டிய மற்றும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய ஆன்மீக தகவல்கள்.
இன்று மதியம் நம் முன்னோர்களை நினைத்து படையலிட்டு தீப ஆராதனை செய்து காகத்திற்கு மற்றும் வயதானவர்களுக்கும் அன்னம் கொடுத்தால் சிறந்தது.
காலை தரிசனம்.., ஸர்வ அமாவாசை தரிசனம்.
இன்று சோம வாரம் :
சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் எனவே இந்த நாளில் விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும். தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்டதால் சோமன் என்னும் சந்திரனால் இந்த விரதம் கடைபிடிக்கப்பட்டது.
ஸ்ரீ சோபக்கிருது வருடம் : பங்குனி மாதம் 26 ஆம் நாள்
சோபகிருது என்பது தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததில் இருந்து பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் கழித்து வரக்கூடிய ஆண்டையே சோபகிருது ஆண்டு என்கிறோம். இந்த ஆண்டை செந்தமிழில் மங்கலம் என்றும் அழைப்பார்கள்.
ஏப்ரல் மாதம் 08 ஆம் தேதி : 08-04-2024
இன்று சிராத்த திதி காலை தொடங்கிய அமாவாசை நள்ளிரவு 12-30 மணி வரை இருக்கும் அதன்பிறகு வளர்பிறை பிரதமை,
இன்றைய நட்சத்திரம் : உத்திரட்டாதி காலை 10-00 மணி வரை, அதன் பிறகு ரேவதி
யோகம் : சித்தயோகம்,
இன்று கீழ் நோக்கு நாள் சந்திராஷ்டமம்,
இன்றும் சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் நாளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடாது. உங்களுக்கு சாதமாக எந்த செயல் செய்தாலும் அது உங்களுக்கு எதிராக முடியும். சந்திராஷ்டமம் என்றால், சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருப்பதால் இரண்டே கால் நாட்களைத் தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம்.
ராகுகாலம் : காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை,
எமகண்டம் : காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை,
குளிகை : மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை,
சூலம் : கிழக்கு, பரிகாரம் : தயிர்
கரணம் : காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
இன்றைய நல்லநேரம் என்கிற சுப ஓரைகள்
மதியம் : 12-00 மணி முதல் 02-00 மணி வரை, 03-00 மணி முதல் 04-00 மணி வரை,
மாலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை,
இன்று விடியற்காலை அமா சோம வாரம், அஸ்வத்த நாரயண பூஜை, இன்று ஸர்வ அமாவாசை, அமாவாசை விரதம், மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை.
இன்று முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டிய நாள், சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாள், மதி மறைந்த நாள்.. “ஸோபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸரயுக்தாயாம் உத்ரப்ரோஷ்டபதா.
ரேவதி நக்ஷத்ரயுக்தாயாம் மாஹேந்தர நாம யோக சதுஷ்பத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்..” என்று பிண்ட பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள்.
இன்று தான தர்மங்கள் செய்ய வேண்டிய நாள்.. தந்தை இல்லா ஆண் மகனும் மாமனார் இல்லா பெண்கள் மட்டுமே அமாவாசை வழிபாடு செய்ய வேண்டும். நம்மையே நம்பியுள்ள கோமாதா.. கால்நடைகள் பறவைகள்.. போன்ற ஏனைய ஜீவராசிகளுக்கும் உணவு அளித்து மகிழ வேண்டிய நாள்..
கோமாதாவிற்கு அகத்திக்கீரை அளித்து மகிழ வேண்டிய நாள்.. காகத்திற்கு அன்னமிட்டு மகிழ வேண்டிய நாள்.. அமாவாசையில் நம் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள்..
அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நமது நோய் நொடிகள் அகலும்.. நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் நமக்கு அமையும். அமாவாசை அன்று செய்ப்படும் தான தர்மங்களால் தீராத கடன் ஒழியும்..
தீர்க்க முடியாத வியாதிகள் குணமாகும், யார் விட்ட சாபமோ என அஞ்சிய துன்ப வாழ்க்கை அகலும்… பித்ருக்கள் அருளாளே இன்றைய நாளும் திரு நளாகட்டும்.