தாய்பாலில் மறைந்துள்ள ரகசியம்..! தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கவனத்திற்கு..!!
குழந்தை பெற்ற பின் தாய்மார்கள் அனைவரும் குழந்தைக்கு தாய்ப்பால் ஆறுமாதம் வரை கட்டாயம் கொடுப்பார்கள். அது குழந்தைக்கும் தாய்க்கும் ஆரோக்கியம் கொடுக்கும் என்று அனைவருக்கும் தெரியும். சருமத்திற்கும் ஆரோக்கியம் தாய்ப்பால் ஆரோக்கியம் தரும் என்று தெரியுமா..?
தெரிந்துகொள்ள இதை படியுங்கள்.
முக வீக்கம் : ஒரு சில குழந்தைகள் இரவில் தூங்காமல் , விழித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுடன், தாயும் சேர்ந்து விழித்துக் கொண்டே இருப்பார்கள் இதனால் முகத்தில் கண் வீக்கம் ஏற்படும். இதை சரி செய்ய இரவில் தாய்ப்பாலை ஒரு காட்டன் துணியில் நனைத்து வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தரம் கொடுத்தால். வீக்கம் வற்றி விடும்.
தாய்ப்பால் ஃபேஸ்வாஷ் : சிறிதளவு முல்தானி மெட்டியை எடுத்து அதனுடன் சிறிதளவு தாய்ப்பால் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகம் கழுவினால். முகம் அழகாக இருக்கும் மேலும் அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தாய்ப்பால் கட்டி : தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், தாய்ப்பால் கட்டிக்கொள்ளும் அவ்வப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் தாய்ப்பால் காட்டுவதும் நின்று விடும். மார்பக புற்றுநோய் ஏற்படாது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.