மதுவிலக்கு திருத்தச்சட்டம் நிறைவு..! சட்டப்பேரவையில் முக்கிய சட்டங்கள்…!
தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர் தீர்மானங்கள் குறித்து விவாதம் செய்தனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து நீட்டை முழுவதுமாக விலக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் மத்திய அரசை வலியுறுத்தி சில அரசுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
கள்ளகுறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அப்படி உயிர் இழந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையும், பெற்றோரை இழந்த குடும்பங்களுக்கு அதாவது இரண்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை மற்றும் வைப்பு தொகைகள் வழங்கப்பட்டது.
அதன் பின் இந்த மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை விற்பனை செய்த குற்றவாளிகள் 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. மேலும் பல்வேறு மாவட்டங்களில் அது தொடர்பான நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டது.
தற்போதுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி அருந்துதல் குற்றங்களுக்கும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தில் சிறை தண்டனையின் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுவகை மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்க, கொண்டு செல்வதற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால், ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனை அளிப்பதோடு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிக்கைகள் வெளியானது…
அதுசமயம் சில குற்றங்களை செய்து அதற்கான தண்டனை களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது ஒரு சிலர் விதிகளை மீறி சாராயம் காய்ச்சுதல் விற்பனை செய்தல் அவர்கள் மீது உடனடி கடும் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரிகளுக்கு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் அதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருட்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராதத் தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கு வழிவகை செய்யும் அளவிற்கு இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ