ஆட்டுக்கறி வடை..!
எலும்பில்லா ஆட்டுக்கறி
கடலைபருப்பு
சோம்பு
கரம் மசாலா
பூண்டு
பச்சை மிளகாய்
சீரகம்
கொத்தமல்லி
கறிவேப்பிலை
வெங்காயம்
பொட்டுகடலை
எண்ணெய்
பெருங்காயம்
உப்பு
முதலில் கடலைபருப்பு, சோம்பு, சீரகம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
அதனுடன் ஆட்டுகறியை போட்டு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் பெருங்காயம், பொட்டுகடலை, கரம்மசாலா ஆகியவற்றை போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி, அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
மாவில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதான் அட்டகாசமான ஆட்டுக்கறி வடை தயார். ட்ரைப் பண்ணி பாருங்க..