குஜராத்தில் ஊருக்குள் வந்த சிங்கம் ஒன்றினை நெருநாய்கள் ஒன்றிணைந்து விரட்டும் காட்சிகள் இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
குஜராத் கிராம தெருக்களில் சிங்கங்கள் சுற்றி வருவது என்பது புதிதான விஷயமல்ல. அங்குள்ள கிர் தேசிய பூங்காவில் இருந்து தப்பி வரும் சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை இரவு நேரங்களில் ஊருக்குள் உலா வரும் ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
மனிதர்களின் வாழ்விடத்திற்குள் நுழையும் இவை, உணவுக்காக அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடுவது, மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவது, தெருக்களில் சுற்றித்திரிவது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக குஜராத் கிராம் ஒன்றில், தெருவில் ஜாலியாக வாக்கிங் வந்து கொண்டிருந்த ஆண் சிங்கத்தை, அங்கிருந்த நெருநாய்கள் ஒன்று கூடி தலைத்தெறிக்க ஓட விட்ட வீடியோ இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
30 வினாடிகள் கொண்ட வீடியோவில் காட்டுக்கு ராஜா என அழைக்கக்கூடிய வகையில் கம்பீர தோற்றம் கொண்ட ஆண் சிங்கம் ஒன்று தெருவில் சுற்றி திரிவதைக் காணலாம். அங்கு வசித்து வரும் தெருநாய்கள் சிங்கத்தை பார்த்தது, “யார் இடத்துல வந்து யார் சீன் போடுறது” என்பது போல் தங்களது ஏரியாவிற்குள் நுழைந்த சிங்கத்தை ஓட, ஓட விரட்டுகின்றன. அதிக அளவில் பகிரப்பட்டு வரும் இந்த காட்சிகள், சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.
இதோ அந்த வீடியோ…
Dogs chased away a lion in Gir, Gujarat. pic.twitter.com/fo70obvlXP
— News Arena India (@NewsArenaIndia) March 22, 2023