நினைத்து நிறைவேற்றி தரும் ஸ்ரீரடி சாய் பாபா..!! இந்த மந்திரத்தை சொல்ல மறக்காதீங்க..!!
கடந்த சில தினங்களாக இறைவன் வழிபாடு பற்றியும், வழிபாட்டு தெய்வங்கள் பற்றியும் பார்த்துக்கொண்டு வருகிறோம், அதில் இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, சாய்பாபா வழிபாடு.
விரதம் இருக்கும் முறை :
வியாழன்கிழமை சாய்பாபாவிற்கு சிறந்த நாள்.., வாரந்தோறும் சாய்பாபா விற்கு விரதம் இருந்து, அதாவது காலை முதல் மாலை 6 மணி வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். நீர் ஆகாரம் எடுத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து 7, 9 அல்லது 11 வாரங்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து மாலை சாய்பாபா கோவிலுக்கு சென்று பிரார்தனை செய்து வழிபாட்டால், மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.
சில பெண்களுக்கு இந்த சமயத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் விரதம் இருந்து மனதார.., பாபாவை நினைத்தால் போதும், மாதவிடாய் சமயத்தில் கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. விரதம் கடைப்பிடிப்பது சிறந்த பலனை தரும்.
விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள்.., ஆரம்பத்திலேயே விரதம் இல்லாமல் இருந்து விடலாம். முறையான விரதம் தான் என்றும் பலன் தரும்.
“சாய்பாபா” இந்த மந்திரச்சொல்லின் “சாய்” என்ற சொல்லுக்கு, “சாட்சாத் கடவுள்” என்று அர்த்தம்..
இந்த மந்திரங்களை வியாழன் தோறும் 11முறையோ, 108 முறையோ அல்லது 1008 முறை உச்சரிக்கலாம்… அப்படி உச்சரித்தால் நாம் கேட்ட வரம் கிடைக்கும்..
சாய்பாபா காயத்ரி மந்திரம் :
மூல மந்திரம் :
“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி..”
சாயிநாதர் திருவடி :
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..