தக்காளி சாற்றில் இவ்வளவு நன்மைகளா ?
தக்காளி என்பது நம் உணவுகளில் இன்றியமையாத ஒரு பொருளாகும். தக்காளி சாறு என்பது ருசிக்காக மட்டுமல்லாமல் அதில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருக்கும். தக்காளியில் விட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. பொதுவாக சிகப்பு நிற பழங்கள் அனைத்தும் இதயத்திற்கு உகந்தவை அந்த வகையில் தக்காளியில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு மேலும் நன்மை சேர்க்கும்.
தக்காளியில் பீட்டா கரோட்டில் ஜியாக்ஸ் ஆண்டின் மற்றும் லுடின்னு உள்ளிட்ட பொருட்கள் இருப்பதால் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது கண் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்க தக்காளி சாறு மிகவும் உதவி புரியும். தினமும் தக்காளி சாறு குடித்து வருவதால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும் . அவற்றை பார்க்கலாம்..
1. தினமும் தக்காளி சாறு குடிப்பதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அளவுகள் அதிகமாகும்.
2. இதய நோய் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணையாகும்.
3. மலச்சிக்கல் அஜீரணம் மற்றும் செரிமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
4. நம் உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது.
5. நீர் பிடிப்பு பிரச்சனைகளுக்கு தக்காளி சாறு குடிப்பது நல்லது.
6. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் .
7.கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
8.ரத்தம் உறைவதை தடுக்கவும் தக்காளி சாற்றை தினசரி உட்கொள்ளலாம்.
9.ரத்த அணுக்களில் உள்ள கட்டிகளையும் இது தடுக்கும்.
நாம் தினசரி உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வது பெரிதும் நன்மை பயக்கும் .ஆனால் சிறியவர்கள் தக்காளியை ஓரமாக ஒதுக்கிவைத்து விட்டு உண்பார்கள்.பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணவில் உள்ள ஆரோக்கியத்தை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் உள்ள உணவு பொருட்களை வைத்து நம் உடலை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
– நிரோஷா மணிகண்டன்