இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா வரும் மே மாதத்தில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறார். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. “
கடந்த 1984ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா ரஷ்ய விண்கலமான சூயஸில் விண்வெளிக்கு பயணம் சென்றார். அதற்கு பிறகு, இந்திய வம்சாவளியினரான கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளிக்கு சென்றுள்ளனர். ஆனால், இந்தியர் க்ஷூட்;உ விண்வெளிக்கு செல்ல முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மே மாதத்தில் விண்வெளிய பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் உறுதிப்படுத்தியுள்ளார். Axiom-4 திட்டத்தின் கீழ் சுபான்ஷூ சுக்லா விண்வெளிக்கு செல்கிறார்.
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விர்ஸ்டன் தற்போது ஆக்சியம் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் சுபான்ஷூ சுக்லா போலந்து நாட்டை சேர்ந்த ஸலோவான்ஸ் வுசான்கி ஹங்கேரி விண்வெளி வீரர் டிபார் காபு ஆகியோர் விண்வெளிக்கு பயணிக்கின்றனர். விண்கலத்தின் பைலட்டாக சுபான்ஷூ சுக்லா இருப்பார்.
இதற்காக, கடந்த எட்டு மாதங்களாக நாசா மற்றும் தனியார் விண்வெளி நிறுவனமான ஆக்சியம் ஸ்பேஸில் சுக்லா பயிற்சி பெறு வருகிறார். இவர்கள் ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 மூலம் விண்வெளிக்கு செல்லவுள்ளனர். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்படும்.இந்திய விமானப்படையில் பணியாற்றிய குரூப் கேப்டன் சுக்லா, இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது, ககன்யான் விண்கலத்தில் பயணிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.