சஷ்டி விரதம் மந்திரம்..!! மாலை 6 – 9 மணி வழிபாடு..!கிடைக்கும் வரம்..!!
எந்த வினையாக இருந்தாலும் கந்தன் அருள் இருந்தால்.., வந்த வினையெல்லாம் விலகி விடும் என்று சொல்லுவார்கள். முருகருக்கு பல விரதங்கள் இருந்தாலும் முக்கியமானதாக சொல்லப்படுவது சஷ்டி விரதம் தான்.
கந்தசஷ்டி விரதத்தை பல முனிவர்களும், தேவர்களும் இருந்த விரதம், சுப்பிரமணியருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய மந்திரம் இடம்பெரும். சஷ்டி என்பது திதி விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டி தேவியை விரும்புபவன் என்றும் பெயர்.
சஷ்டி விரதம் இருப்பது எப்படி என்று பார்க்கலாம் :
சஷ்டி நாளில் காலை முதல் மாலை வரை அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து, காலை மாலை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். காலை, மாலை வீட்டில் விளக்கு ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும். என சொல்லுவார்கள்..,
அப்படி செய்தால் நாம் கேட்கும் வரத்தை முருகர் நிச்சயம் செய்வார் என்பது ஐதீக., உண்மை.
இன்றயை நாளில் முருகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது இன்னும் சிறந்தது.., ஒவ்வொரு சஷ்டி அன்றும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்,
சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு, விரைவில் திருமணம் நடக்கும்., குழந்தை இல்லாத தம்பதிகள் இருவரும் சேர்ந்து, விரதம் இருந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்..,
இந்த பூஜையை நாம் மாலை 6 மணி முதல் 9 மணிக்குள்ளாக பண்ண வேண்டும்.., குறிப்பாக பெண்கள் மாலை நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து முருகரின் திருவுருவ படத்திற்கு வண்ண பூக்களால் அலங்கரித்து குங்குமம் மஞ்சள் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அதன் பின் முருகருக்கு முன்னாக அமர்ந்து கிழக்கு முகம் பார்த்தவாரு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.,
ஆனால் இந்த பூஜையை செய்யும் பக்தர்கள் வடக்கு திசை பார்த்து அமர வேண்டும்..
அமர்ந்து 108 முறை “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்..
அதன் பின் 108 முறை “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை எழுத வேண்டும்..
அப்படி செய்தால் நாம் நினைத்த செயல் நிறைவேறும், இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது அல்லது எழுதும் போது ராவுகாலம், எமகண்டம் பார்த்து செய்ய வேண்டும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..