பேரறிஞர் அண்ணாவை பற்றி தவறாக பேசுபவர்களின் நாக்கை துண்டாக்கும் கொள்கைமற்றவர்கள் மறவர்கள் இங்குள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக – பாஜக தலைவர் அண்ணாமலை இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவை ஒருமையில் அண்ணாமலை பேசி சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரையில் அதிமுக நடத்திய அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு;
எம்.ஜி.ஆர். பெயரை கூட மறந்துவிடுவோம் ஆனால், அண்ணாவின் பெயரை மறக்க முடியாது என குறிப்பிட்டார். அண்ணாவை பற்றி தவறாக பேசினால் அவர்கள் நாக்கு அழுகிவிடும். மேலும் அவர்களின் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்களில் உள்ளதாக அண்ணாமலைக்கு ஆவேசமாக எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க: உன் பொறுக்கி தனத்தை இங்கேக் காட்டக்கூடாது.. எச்.ராஜாவிற்கு பகீரங்கமாக எச்சரிக்கை விடுத்த புகழேந்தி..!