சங்கட சதுர்த்தி விநாயகர் வழிபாடு..!!
இன்று சங்கட சதுர்த்தி.., விநாயகருக்கு உகுந்த நாள். இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா..?
சங்கட சதுர்த்தி என்பது நம் வாழ்வில் இருக்கும் அனைத்து சங்கடங்களையும் நீக்க வல்லது. சங்கட சதுர்த்தி நாளில் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நம் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் குறைந்து விடுமாம்.
கோவிலுக்கு சென்று அருகம் புல் வைத்து, பிரார்த்தனை செய்தால்.., கடன் தொல்லை நீங்கி விடும், கல்வி அறிவு அதிகரிக்கும்,
சதுர்த்தி அன்று விரதம் இருந்து, விநாயகருக்கு பால்,கொழுக்கட்டை அல்லது கொண்ட மூக்கடலை வைத்து தீபாராதனை செய்து, நான்கு பேருக்கு பிரசாதமாக கொடுத்து வந்தால் திருமணத்தடை நீங்கி.., விரைவில் திருமணம் நடக்கும்.
குழந்தை இல்லாமல் தவிப்பவர்கள் சதுர்த்தி நாளன்று அருகம் மாலை சாத்தி வழிபாடு செய்து வந்தால், குழந்தை வரம் கிடைக்கும்..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..