ரஷ்யாவிற்கு மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், ரஷ்யாவிற்கு மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, சாம்சங் நிறுவனத்தில் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் நிறுவனத்தின் பிற சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. எங்களின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அவ்ர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. எங்கள் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு $6 மில்லியன் நன்கொடை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.