பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. 3 நாட்கள் நடந்த தாக்குதல் அமெரிக்கா தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நடிகர் சல்மான்கான் , போர் முடிவுக்கு வந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று ட்விட் பதிவிட்டார். இதையடுத்து, பலரும் சல்மான்கானை விமர்சிக்க தொடங்கினர். இந்திய ராணுவம் பாகிஸ்தானை தாக்கிய போது எந்த கருத்தும் தெரிவிக்காத சல்மான், இப்போது மட்டும் பதிவிட்டது ஏன்? என்கிற கேள்வியை எழுப்பினர்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி எந்த கருத்தும் வெளியிடவில்லை என்று ஒருவர் சல்மானிடம் கேட்டார். இன்னொருவர், 2,3 நாட்களாக அமைதியாக இருந்து விட்டு, இப்போது பதிவு வெளியிட்டது ஏன்? இனிமேல் உங்கள் படங்களை பார்க்க மாட்டேன். நீங்கள் உண்மையான இந்தியரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மற்றொருவர் சல்மான் பாயை பற்றி எங்களுக்கு தெரியும். அவர் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளுடன் நட்புடன் இருக்க விரும்புபவர். உள்நாட்டு மக்கள் செத்துப் போனாலும் அவருக்கு கவலை இல்லை என்று கூறியிருந்தார்.
இப்படி எதிர்ப்பு கிளம்பியதால், சல்மான் தனது எக்ஸ் பதிவை அழித்து விட்டார்.