அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையில், மற்றொரு நடவடிக்கையை உத்தரபிரதேச அரசு எடுத்துள்ளது.
அயோத்திக்கு அருகிலுள்ள பைசலாபாத்தில் இருந்து தொடங்கும் ராம் பாத் பகுதியில் 14 கி.மீ தொலைவுக்கு மட்டன், மது இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீடி, பான், குட்கா போன்றவை விற்கவும் தடை போடப்பட்டுள்ளது. சிகரெட்டும் விற்க முடியாது. அதே போல், ஆண்கள் மற்றும் பெண்கள் ஜட்டிக்கான விளம்பரங்களுக்கும் இந்த சாலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அயோத்தி மாநகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள சரயு நதிக் கரையில் இருந்து தொடங்கும் ராம் பாதையின் ஐந்து கி.மீ நீளம், பைசாபாத் நகரத்தில் வருகிறது. தற்போது, இந்தப் பகுதியில் இறைச்சி மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் பல கடைகள் உள்ளன. இந்த கடைகள் விரைவில் அகற்றப்படவுள்ளன.