டைட்டானிக் கப்பலும் அதற்கு நடந்த விபத்தும் அனைவருக்கும் தெரியும். டைட்டானிக் கப்பலுக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வெளியே வந்த டைட்டானிக் படமும் சக்கை போடு போட்டது. இதுவெல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், டைட்டானிக் கப்பலுக்கும் ஒரு பூனைக்குமுள்ள தொடர்பு பற்றிதான் பலரும் அறியாதது. இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் டைட்டானிக் கட்டப்பட்ட போது, அங்கு ஒரு பூனை வாழ்ந்தது.
இந்த பூனை டைட்டானிக் கப்பலுக்குள் எங்கு வேண்டுமானாலும் போகும் வரும். டைட்டானிக் கப்பலின் அங்கீகரிக்கப்பட்ட பூனையா அது கருதப்பட்டது. இந்த பூனையின் பெயர் ஜென்னி. டைட்டானிக் கப்பல் டிரையல் சென்று கொண்டிருந்த போது, ஜென்னி 6 குட்டிகளை ஈன்றது. இந்த பூனையின் மீது அலாதி பிரியம் வைத்திருந்த ஜிம் முல்ஹோலண்ட் என்ற டைட்டானிக் கப்பலுக்குள் ஜென்னிக்கும் அதன் குட்டிகளுக்கு தனி இட வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.
முதலில், அங்கு இருந்த ஜென்னி டைட்டானிக் நியூயார்க் நகருக்கு பயணத்தை தொடங்கும் காலக்கட்டத்தை நெருங்க நெருங்க அங்குமிங்கும் ஓட தொடங்கியது. ஒரு வித பயத்துடன் அலறிக் கொண்டே இருந்தது.
பின்னர், அமைதியாக தனது 6 குட்டிகளையும் கழுத்தை கவ்வி கப்பலை விட்டு வெளியே எடுத்து சென்றது. இதனை, ஜென்னியின் மீது பாசம் கொண்டிருந்த ஜிம் முல்ஹோலண்டும் பார்த்து கொண்டிருந்தார். பூனையின் நடத்தை அவருக்குள் எதையோ உணர்த்தியது.
தையடுத்து, கப்பலில் இருந்த தனது உடைமைகளை எடுத்து கொண்டு ஜிம்மும் டைட்டானிக் கப்பலை விட்டு வெளியேறி விட்டார். டைட்டானிக் கப்பலின் முதல் பயணத்தில் ஜிம் செல்லவில்லை. இதனால், அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த தகவலை ஜிம் டைட்டானிக் மூழ்கி சில ஆண்டுகள் கழித்து ஜிம் பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.