கடந்த 17 ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரை வெல்லாமல் இருந்த ஆர்.சி.பி அணி 18வது சீசனில் முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து, அணியினர் பெங்களுரு திரும்பியவுடன் உடனடியாக, வெற்றி ஊர்வலம் நடந்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. முதலில் விதான் சவுதா பகுதியில் ஊர்வலம் நடந்த பெங்களுரு போலீஷ் கமிஷனர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஆர்.சி.பி அணிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டுமென கடிதம் எழுதியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வெற்றி ஊர்வலம் வைத்துக் கொள்ளாலம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதுவரை வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் தங்க முடியாது. இதனால், அவர்கள் வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உடனடியாக வெற்றி ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர். அவசரகதியாக நடத்தப்பட்ட இந்த வெற்றி ஊர்வலத்தில் உடுமலைப் பேட்டையை சேர்ந்த பெண் மொத்தம் 5 தமிழகர்கள் உள்பட 11 பேர் இறந்து போனார்கள்.
இந்த சம்பவத்தில் தனது ஒரே மகனை இழந்த தந்தை ஒருவர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அழுது கொண்டே அவர் கூறியதாவது,’ என்னிடம் சொல்லாமல் எனது மகன் இங்கு வந்து விட்டான். இப்போது, எனது ஒரே மகனை இழந்து நிற்கிறேன். அவனது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல், துண்டு துண்டாக கட் செய்யாமல் முழுமையாக என்னிடம் தந்து விடுங்கள். இப்போது, முதல்வர், துணை முதல்வர் இங்கு வருகிறார்கள். ஆனால், என் மகன் திரும்ப கிடைப்பானா?’ என்று கதறியது உருக்கத்தை ஏற்படுத்தியது.