பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்..!!
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மே 27ம் தேதி கொடியேற்றம் தொடங்கியது.., தினமும் தங்கப் பல்லாக்கு ஊர்வலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஜூன் 1ம் தேதி திருவிழாவில் வள்ளி தெய்வானை முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மாலை 4:39 மணிக்கு நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டு.., தேரை வடம் பிடித்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் முழங்க.., தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இதுபோன்ற ஏராளமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post