வலிகள் தான் வாழ்க்கை..! 70 வயது பாட்டியின் கதை..!
ஒரு பாட்டி பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்.
ஆபிஸ் போக வர பார்ப்பேன்.
பாட்டியும் பார்ப்பார், சரி. இந்த பாட்டியிடம் இன்று வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்.
நான் : “மாம்பழம் எப்படி பாட்டி ..?”
பாட்டி : “எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்”
நான் : மல்கோவா மாம்பழம் நன்றாக இருந்தது.
பாட்டி : “எடு கண்ணு. கல்கண்டு மாதிரி இருக்கும்”.
நான் : “எவ்வளவு..?”
பாட்டி : கிலோ 70 ரூபா. நீ 60 ரூபா கொடு போதும்.”
நான் : 60 அதிகமோ.? மனசு பேரம் பேசியது. “அம்பது போட்டு 2 கிலோ கொடு ஆயா”
பாட்டி : “கட்டாது சாமி. அசலே 55 ரூபா வருது.”
நான் : சரி, வேண்டாம். அப்புறம் வர்றேன்.
பாட்டி : நகர முற்படும்போது “சரி எடு ராசா. காலைல மொத வியாபாரம்”
நான் : 3 கிலோ வாங்கினேன்.
சில நாட்கள் கழித்து என் ஏரியாவில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போனேன்.
அதனுடன் சேர்ந்த மாதிரி ஒரு கார்ப்ரேட் பழ விற்பனை நிலையம்.
பழங்கள் நேர்த்தியாக அடுக்கி அழகாக இருந்தன. அதோ மல்கோவா மாம்பழம் பாட்டியிடம் வாங்கியது போலவே இருந்தது. என்ன விலை.?
கிலோ 80 என்று எழுதியிருந்தது. “ஏம்மா மல்கோவா கிலோ என்ன விலை?” 80 ரூபா”
இங்கே பேரம் பேச முடியாது. ஒரே விலைதான்.
மன பாரத்தில் நான் :
அப்போ, பாட்டியிடம் 50 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி, அதை பெருமையாக வீட்டில் சொல்லி, ஏனோ மனசு வலித்தது.
மாலை வரும்போது பாட்டியை பார்த்தேன். மெலிதான தேகம். சுருக்கம் நிறைந்த முகம். நடுங்கும் கைகள். ரோட்டில் பழ வியாபாரம்.
மனது வலித்தது. வலிகளே வாழ்க்கையாகி போனது இந்த பாட்டி மாதிரி பலருக்கும் இங்கே. வாழ்கிறார்கள்.
என் MBA என்னை பாத்து சிரித்தது.
“பாட்டி ஏதாவது உதவி வேணுமா” பணம் ஏதாவது தரட்டுமா”
வேண்டாம் கண்ணு. ஏதோ கடவுள் கொஞ்சம் படியளக்கறார்..
பாட்டி இதுல 2000 இருக்கு. வாங்கிகங்க”
“எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு..?
“இல்ல பாட்டி. இருக்கட்டும். எங்க பாட்டிக்கு நான் தர மாட்டேனா..?”
கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டு என்னை ஆசீர்வாதம் செய்தார்.. மனசு கொஞ்சம் லேசானது.
அப்போது என் அம்மா சொன்னது தான் எனக்கு நியாபகம் வந்தது.. “மற்றவர்கள் துன்பங்களை கேட்டால் மட்டும் போதாது. முடிந்த உதவிகளை செய்யணும்”
நான் : கிளம்பும்பொழுது பாட்டியிடம் கேட்டேன்,”பாட்டி ஆப்பிள் எப்படி.?
பாட்டி : கிலோ 120. நீ 110 கொடு சாமி.”
நான் : 3 கிலோ போடுங்க பாட்டி.
பாட்டி : சரி கண்ணு. ஏதோ மகராசன் எங்கிட்ட வந்து வாங்குறியே.
நான் : 3 கிலோ வாங்கி 450 ரூபாய் கொடுத்தேன்.
எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு.?
இல்ல பாட்டி இதையே. தோ அங்கே இருக்கிற கார்ப்பரேட் பழக்கடையில் வாங்குனா 450 ரூபாய் தான கொடுத்திருப்பேன்.
பரவாயில்லை, புடி பாட்டி என்று உரிமையோடு அந்தப் பணத்தையும் அதன் கையில் கொடுத்து விட்டேன்.
என் பிடிவாதம் பார்த்து, பாட்டி முகத்தில் முதன்முறையாக சிரிப்பு. அது என்றும் மறக்காது எனக்கு.
இனி வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது. பாவம் அவர்கள்.
வெளியே சொல்ல முடியாத பல விதமான வலிகளோடு அவர்களில் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
– வீரபெருமாள் வீர விநாயகம்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..