மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மார்கழி மாதத்தில் வருடா வருடம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதாசியாக கொண்டாடப்படும், அதனை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அவரை தரிசனம் செய்தனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த அந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் தமிழகத்திலுள்ள சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மேலும் சென்னை திருநீர்மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் திருக்கோவிலூர் ஆதி திருவரங்கம் கோவிலிலும், மதுரை தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளிட்ட னைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.