“நம்ப செல்வ கணபதி வந்திருக்காக.. நம் திமுக வேட்பாளர் வந்து இருக்காக..” வித்தியாச வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாவா லட்சுமணன்..!!
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இறுதி கட்டப் பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை வாக்கு சேகரிப்பு :
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர், ஈச்சங்குடி, நர்சிங்கநத்தம், கடலி திருவிளையாட்டும் கொத்தங்குடி, அரசூர், விளாகம், எரவாஞ்சேரி, நெடுவாசல், கூடலூர், திருவிடைகழி, காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூர், இலுப்பூர், உத்திரங்குடி, விசலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து,
“சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ ஆகியோர் பிரச்சார வாகனத்தில் சென்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.
தொடர்ந்து தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் மற்றும் வேட்பாளர் சுதா ஆகியோர் சென்று மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை மற்றும் தியாகி வள்ளியம்மை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் மாயி திரைப்படத்தின் புகழ் பாவா லட்சுமணன் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது திரைப்படத்தின் பிரபல நகைச்சுவை வசனமான மாயி அண்ணன் வந்திருக்காக மாப்பிள்ளை மொக்க சாமி வந்து இருக்காங்க வசனத்தை வேட்பாளருக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கூறி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து அங்கிருந்த பழக்கடைகளுக்கு சென்று பழங்களை வெட்டி கொடுத்தும் ஒவ்வொரு கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நகைச்சுவை நடிகரின் இந்த வாக்கு சேகரிப்பு அந்தப் பகுதி மக்களிடையேவும் வியாபாரிகள் இடையேவும் பெரும் வரவேற்பை பெற்றது.