தெரு நாய்களின் தொல்லை..! இனி இல்லை..! சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்..!
சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லவே முடிவதில்லை.அதன்படி சென்னையில் 55 மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் மகனுடன் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற போது தெரு நாய்கள் துரத்தியதால் கீழே விழுந்தில் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ரேபிஸ் நாயின் தலைநகரம் இந்தியா :
இந்தியாவில் சுமார் 1.5 கோடி தெரு நாய்கள் உள்ளதாகக் கால்நடை கணக்கெடுப்பு கூறுகிறது. இந்நிலையில் ரேபிஸ் நாய்க்கடி தலைநகரம் என்ற மோசமான பெருமையை பெற்ற நாடாக இந்தியா இருகிறது.
வளர்ப்பு நாய்களும் தொல்லை தான் :
தெரு நாய்கள் தான் தொல்லை கொடுகிறது என்ற நினைத்தால் அதைவிட வளர்ப்பு நாய்களும் செய்து வருகிறது. அந்தவகையில் சமிபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு ராட்வெய்லர் வகை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. பின் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கமிஷனர் ராதாகிருஷ்ணன் விளக்கம் :
இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்கள் சந்திப்பில் சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் யார் யாரெல்லாம் ராட்வெய்லர் நாய்களை வளர்க்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு நடக்கிறது. நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும் என்று குறியுள்ளார்.மேலும் குறிப்பிட்ட வகை நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளார்.
போயர் போயல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காகாசியன் ஷெப்பர்டு, தெற்கு ஆசிய ஷெப்பர்டு, டோர்ன்ஜாக், சர்பிளானினாக், ஜப்பானிய அகிடா, மாஸ்டிப்ஸ், ராட்வெய்லர், பிட்புல், டெர்ரியர்ஸ், ரோடிசியன், உல்ப் டாக், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு, கேன் கார்சோ உள்ளிட்ட நாய் இனங்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் முதன்முதலாக நாய்கள் இனக்கட்டுப்பாடு மையம் :
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பில், கண்ணம்மாபேட்டை , புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலணி இடங்களில் நாய்களுக்கான இனக்கட்டுப்பாட்டு மையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த இனக்கட்டுபாட்டு மையத்தில் பெட் க்ளினிக், ஸ்கேன் சென்டர், எக்ஸ்ரே போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.
இனக்கட்டுபாட்டு மையத்தின் பயன்கள் :
இந்த மையங்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது ஆண்டிற்கு 20ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடியும் மற்றும் வெறி நாய்களுக்கு தடுப்புசி போடும் பணியும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாவும் கூறுகின்றனர்.
– பவானி கார்த்திக்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..