முத்து மாரியம்மன் திருக்கல்யாணம் – கோவையில் பக்தர்கள் உற்சாகம்
கோவை மாவட்டம் ராம் நகரில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது, கடந்த மாதம் சித்திரை திருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது, தொடங்கிய நாளில் இருந்து தினமும் தீப ஆராதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை திருக்கல்யாணம் நடைபெற்றுள்ளது. விஸ்வரூப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்துள்ளனர்.
-வெ.லோகேஸ்வரி