சருமத்தை என்றும் அழகாக வைக்கும் முல்தானி மெட்டி..!!
முகத்தை என்றும் இயற்கை அழகாக வைக்க முல்தானி மெட்டி பயன்படுகிறது. எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படாத வகையில் முல்தானி மெட்டி சிறப்பு பெற்றது. எந்த சருமத்தினர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
எண்ணெய் சருமம் : எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு முகம் என்றும் எண்ணெய் வடிந்தே காணப்படும். இந்த எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் என்றும் அழகாக இருக்க,
* முல்தானி மெட்டி பவுடருடன் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் பூசி வந்தால், எண்ணெய் பிசுபிசுப்பு நீங்குவதோடு, முகப்பரு மற்றும் கரும்புள்ளி ஏற்படாமல் தடுக்கும்.
* இது முகத்திற்கு குளிமை தருவதால், சரும கருமை ஏற்படாமல் தடுக்கும். கோடை காலத்திற்கு ஏற்றது.
வாரத்திற்கு இருமுறையாவது இதை பயன்படுத்த வேண்டும்.
முக கருமை நீங்க :
* முல்தானி மெட்டியுடன் சிறிதளவு எலும்பிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்துக்கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை எடுத்து முகத்தில் பூசி 15 முதல் 20 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகக்கருமை நீங்கி விடும். வாரத்திற்கு இருமுறை இப்படி செய்தால் சரும மாற்றத்தை உணர முடியும்.
வறண்ட சருமத்திற்கு :
வறண்ட சருமம் கொண்டவர்கள் முல்தானி மெட்டியை இப்படி செய்து பாருங்கள்.
* முல்தானி மெட்டியில் சிறிதளவு தேன் சேர்த்து, முகத்தில் தடவி 20 நிமிடம் வரை ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் நல்ல பலனை பெறலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..