மோடி வேட்பு மனு தாக்கல்..! மீண்டும் ரோடு ஷோவா.? மோடியை எதிர்கப்போவது இவரா..?
18வது நாடாளுமன்ற மக்களவை இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது.
2-ம் கட்டமாக கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்திலும் நடைபெற்றது.., கடந்த மாதம் 26-ம் தேதி 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.71 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
3-ம் கட்டமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
4ம் கட்டமாக ஆந்திரா மாநிலத்தின் 96 தொகுதிகளிலும் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது,
இந்நிலையில் 5ம் கட்ட தேர்தலாக இந்தியாவில் அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்திர பிரதேசத்தில் 80 தொகுதிகள் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
வாரணாசியில் மீண்டும் எம்.பியாக பிரதமர் மோடி போட்டியிடுகின்றார், கடந்த இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மோடி, மூன்றாவது முறையாக மீண்டும் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகின்றார்.
அதற்காக ஒரு நாள் முன்னதாகவே வாரணாசிக்கு வந்த மோடி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவரின் வருகையையொட்டி பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாரணாசி வருகை தந்துள்ள மோடி, லங்கா பகுதியில் உள்ள மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் தனது வாகனப் பேரணியை ( Road Show ) ஆரம்பித்தார்.
வாரணாசியில் தொடங்கிய இந்த ரோடு ஷோ முக்கிய சாலை களில் மட்டுமே நடத்தப்பட்டது. இதில், உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
வாரணாசியில் பிரதமர் மோடி எதிர்த்து காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். கடந்த மூன்றாவது முறையாக போட்டியிடும் அஜய்ராய் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சுமார் 4 லட்சத்து 79 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..