அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிற்கு..!சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாக கூறி.., அவரின் மனைவி “மேகலா” தொடுக்கப்பட்ட வழக்கிற்கு நாளை தீர்ப்பு.
சட்ட விரோத பணிமாற்ற வழக்கில், அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோதமாக செயல்பட்டு காவலில் இருப்பதாகவும், அவரை மீட்டு தரும்படியும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா. சென்னை உயர்நீதி மன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
நாளை காலை 10:30 மணிக்கு உச்ச நீதி மன்றம்.., இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க இருப்பதாகவும், உச்ச நீதி மன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
மேலும் அவர் கவனித்து வந்த துறைகளின் அமைச்சர்கள் ஆனா தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படுள்ளது.
கடந்த 22ம் தேதி ஜெ.ஜெயவர்தன் தொடுத்த இந்த வழக்கை, ஜூன் 26ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ஜூலை 7ம் தேதி ஒத்தி வைத்துள்ளது. தற்போது இந்த வழக்கு முதன்மை அமர்வுக்கு மாற்றியுள்ளது.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கைது செய்யும் முன்னர்.., அவரிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.