மஸ்காரா போடும் பெண்கள் கவனத்திற்கு..!!
அழகு சாதன பொருட்களில் ஒன்றான மஸ்கரா பல பெண்களின் கண் அழகை கூட்டுவதற்கு உதவுகிறது. அதற்கு நிகராக அதை பல பெண்கள் விரும்புவதும் இல்லை.., இந்த குறிப்பு மஸ்காரா போடும் பெண்களுக்கு மட்டுமே.
மஸ்காராவில் பல்வேறு ரசாயனப் பொருட்கள் இருப்பதால், கண்களுக்கு கேடு விளைவிக்கிறது. தினசரி கண்களில் மஸ்காரா உபயோகித்தால் என்ன என்ன விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
மஸ்காராவில் வேதிப்பொருட்கள் அதிகம் இருப்பதால் கண்களை பாதிப்பதை விட, மார்பக புற்றுநோயை அதிகம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
காரணம் மஸ்கராவில் இருக்கும், பாரப்பென் அதிகம் இருப்பது தான்.
நீண்ட நேரம் கண் இமைகளின் மேல் மஸ்காரா இருப்பதால், பேக்ட்ரியா தொற்று நோயை அதிகரிக்கும்.
மஸ்காரா கண்ணின் வெள்ளை படலத்தில் பட்டாள், அவை கண் நரம்பை அதிகம் பாதிக்கும்.
என்றாவது ஒரு நாள் மஸ்காரா பயன்படுத்தினால்.., கண்களுக்கு தீங்கு அல்ல. தினமும் பயன் படுத்தினால் தான் ஆபத்து. மஸ்காரா வாங்கும் பொழுதே தரமான மஸ்காராவை பார்த்து வாங்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post