மதிமுக சார்பில் மதுரையில் பிரச்சாரம்.. எதற்கு தெரியுமா..?
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் மாநாடு மதிமுக சார்பில் ஆட்டோ பிரச்சார தொடக்கம்.
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மதிமுக சார்பில் மதுரையில் செப்டம்பர் 15ந்தேதி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு குறித்து பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மதிமுக சார்பில் ஆட்டோக்களில் மாநாடு தொடர்பான பதாகைகள் பொருத்தும் நிகழ்வு மற்றும் விளம்பர தொடக்க நிகழ்ச்சி கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
மாநாட்டு பதாகைகள் தாங்கிய ஆட்டோ விளம்பர பிரச்சாரத்தை மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் தொடங்கி வைத்தார். 115 ஆட்டோக்கள் மூலமாக கோவில்பட்டி நகர் முழுவதும் ஆட்டோ பிரச்சார மேற்கொள்ளப்பட்டது இதில்