லோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்கு பதிவு..!! எந்த தொகுதியில் எவ்வளவு சதவிகிதம்..?
லோக்சபா தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது.., அந்த வகையில் 4 கட்ட தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது..
அதனை தொடர்ந்து இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஆறு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் லோக்சபா தேர்தல் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க மற்றொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலும் நடந்து கொண்டு இருக்கிறது..
அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 3ம் தேதியன்று முடிவடைந்தது. மகாராஷ்டிராவின் 13 மக்களவைத் தொகுதிகளில் 512 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளிலும் 466 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மற்றும் ஒடிசாவின் 35 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மக்களவைத் தொகுதிகள் :
பீகாரில் சீதாமார்ஜி, மதுபானி, முசார்பூர், சரன் மற்றும் ஹஜிபூர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதேபோல், ஜார்கண்டில் சத்ரா, கொடார்னா, ஹஜாரிபாக் தொகுதியிலும் மற்றும் ஒடிசாவின் பார்கார்ஹ், சுந்தர்கார்ஹ், பொலாங்கீர், கந்தாமல் மற்றும் அஸ்கா ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும், மகாராஷ்டிராவில் துலே, திந்தோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடக்கு – மேற்கு, மும்பை வடக்கு – கிழக்கு, மும்பை வடக்கு – மத்தி, மும்பை தெற்கு மத்தி மற்றும் மும்பை தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் மோஹன்லால்கன்ஜ், லக்னோ, ரேபரேலி, அமேதி, ஜலாவுன், ஜான்சி, ஹமீர்பூர், பண்டா, ஃபடேபூர், கவுசாம்பி, பராபங்கி, ஃபசியாபாத், கைசெர்கன்ஜ் மற்றும் கோண்டா ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும், மேற்கு வங்கத்தின் பங்கோன், பராக்பூர், ஹெளரா, உலுபெரியா, ஸ்ரீரம்பூர், ஹூக்ளி மற்றும் அரம்பாக் ஆகிய தொகுதிகளிலும் அதேபோல், யூனியன் பிரதேசங்களான ஜம்முகாஷ்மீர் பராமுலா மற்றும் லடாக் மக்களவை தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
5-ம் கட்ட தேர்தலின் வேட்பாளர்கள் :
ராகுல் காந்தி – ரேபரேலி
ராஜ்நாத் சிங் – லக்னோ ,
பியூஷ் கோயல் – மும்பை வடக்கு,
சாத்வி நிரஞ்சன் ஜோதி – ஃபடேபூர்,
ஷாந்தனு தாகுர் – பனாகன்,
சிராக் பஸ்வான் – ஹஜிபூர்,
ஸ்ரீகாந்த் ஷிண்டே – கல்யாண்,
ராஜிவ் பிரதாப் ருடி, மற்றும் லாலு பிரசாத்தின் மகள் ரோஹினி ஆச்சார்யா பீகாரின் சரண் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
இன்று நடைபெற்று கொண்டிருக்கும் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில், வாக்காளர்களின் பாதுகாப்பிற்காக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை முதல் தற்போது நடைபெற்றுள்ள வாக்குபதிவில், இதுவரை 543 மக்களவைத் தொகுதிகளில் 65% வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
மேலும் 6ம் கட்ட வாக்கு பதிவு மே 25ம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதியும் நடைபெறும். அதனை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ