பாஜக செய்த பித்தலாட்டம்..!! சீமான் போட்ட பட்டியல்..? நாதக – தவெக கூட்டணியா..?
மே 18ம் தேதியான நேற்று இனப்படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன எழுச்சி நிகழ்வை நடத்தினார். அதில், நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து நம் மதிமுகம் செய்தியாளர், சீமானை சந்தித்து பேசிய போது. அவர் கூறியதாவது.. “இன்று மே-18 தேதி இனப்படுகொலை நாள் அதே நாளில், 2009ம் ஆண்டு முள்ளி வாய்க்காலில் போர் நடைபெற்றது. அந்த போரில் உயிர் இழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது”.
தமிழக விடுதலைப் புலிகளின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து நம் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு..?
சீமான் கூறியதாவது, “நாங்கள் விடுதலைப் புலிகள் இல்லை, எங்களுக்கு எதற்காக தடை..? எதற்கு விடுதலை புலிகள் அமைப்பு மீது அவர்கள் தடை விதிக்க வேண்டும்..? தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும்..? நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்ற பயம் தான் அவர்களுக்கு. விடுதலை புலிகள் என்ற பெயருக்கே சிலர் பயப்படுகிறார்கள்.
மேலும், இந்த “போரில் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களை இந்திய மீனவர்களை என கூறாதது ஏன்..? கடந்த 10 ஆண்டுகளில் அதை நாங்கள் சாதித்துள்ளோம். என கூறி பாஜக மக்களிடம் வாக்கு சேகரித்தது .., பாஜகவிற்கு தெரிந்தது எல்லாம் பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது மட்டும் தான்.
அதை தவிர இனப்படுகொலை, ஜாதி சண்டை, மத உணர்வை தூண்டி விடுவது, இஸ்லாமியர்களை பற்றி அவதூறாக பேசுவது, அவர்கள் செய்யும் அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி கேட்டால்., அவர்களை சிறைக்கு அனுப்புவது இது மட்டும் தான் தெரியும்..
கடந்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெற்றது.. அப்போதே ஒரு சில இடங்களில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் பாஜகவிற்கு செல்லுமாறு வைத்திருந்தார்கள். இதனால் அன்றைய தினத்தன்றே அந்த குறிப்பிட்ட இடங்களில் கலவரம் நடைபெற்றது.
ஆனால் அதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.., அதன் பின் “வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் ஒரு சில இடங்களில் சிசிடிவி பழுதாகி விட்டதாக சொன்னார்கள்.
ஒன்று இரண்டு இடங்களில் கேமரா பழுது என்றால் சரி, இயந்திரக்கோளாறு என எடுத்துக்கொள்ளலாம். அது எப்படி சொல்லிவெச்சது போல பாஜகவிற்கு ஆதரவு கிடைக்காத இடங்களில் சிசிடிவி பழுதாகும். அதை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
சவுக்கு சங்கர் பேசியதை நம்மால் மறுக்க முடியாது. அவர் பெண்களை பற்றி அவதூறாக பேசுவது மிகவும் தவறு, அதற்காக எல்லாம் அவர் மீது குண்டாஸ், கஞ்சா வழக்கு போட்டுள்ளது தவறு. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருக்கும் குடும்பங்கள் இருக்கிறது. ஆனால், அவரது பேச்சுக்காக பெலிக்ஸை கைது செய்வதில் என்ன நியாயம் உள்ளது..?
விஜயகாந்த் பத்ம பூஷன் விருது :
ஐயா கேப்டன் விஜயகாந்த் எப்படி பட்ட சிறந்த குணம் கொண்ட மனிதர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.., அவர் வாழ்ந்த நாட்களிலேயே எவருக்கும் தீங்கு செய்யாதவர்.., அப்படி இருக்க அவர் வாழ்ந்த கொண்டிருந்த நாளிலேயே அவருக்கு “பத்ம பூஷன் விருது” கொடுத்திருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால், விஜயகாந்த் ஐயாவிற்கு நாம் செய்யும் மரியாதையாக இருந்திருக்கும்.., ஆனால் கேப்டன் விஜயகாந்த் இறந்த பின் கொடுப்பதால் என்ன பலன்..? ஒருவர் இருக்கும் போது மரியாதை கொடுத்தகாதவர்கள் இறந்த பின் ஏன் அவரின் புகழை பாட வேண்டும்.
ராதிகா சரத்குமார் குறித்து இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? “கேடு கெட்ட கேவலமான, அநாகரிகமான அரசியலை அவர்கள் செய்வதால் தான். அவர்கள் செய்யும் அரசியல். சேவை அரசியலோ இல்லை, செய்தி அரசியல். எல்லாம் இன்னும் கொஞ்சம் நாட்கள் தான். அந்த பக்கங்களை கிழித்து எரிந்து தூர விசீ விடுவார்கள்.
தமிழக வெற்றிக் கழகம், மாநாடு இன்னும் சில நாட்களில் நடத்தப்பட உள்ளது, மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்ள அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பீர்களா என்று நாம் கேட்ட கேள்விக்கு..?
அதற்கு சீமான் கூறியதாவது “தமிழக வெற்றிக் கழகம்“ மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால், நான் கட்டாயம் போவேன். விஜயும் நானும் சந்திப்பதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை..? நாங்கள் என்ன கள்ளக்காதலா செய்கிறோம். இந்த நாட்டில் பிரச்னையே அண்ணனும், தம்பியும் சேரக்கூடாது என்பது தான்.,
2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணியா என கேட்டதற்கு..?
என் தம்பியின் பாணியிலேயே சொல்கிறேன், 2026ல் சர்க்கார் ஆரம்பம் என பதில் அளித்தார்.
-வெ.லோகேஸ்வரி
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..