ஆரோக்கியம் கொடுக்கும் தாய்ப்பால்; ஆபத்தாக்கும் உணவுகள்..? தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கவனத்திற்கு..!!
தாய்ப்பால் என்பது மிகவும் ஆரோக்கியமான குழந்தைக்கு கொடுக்கப்படும் ஒன்று.., இரண்டு வயது வரையாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் முதல் ஆறுமாதம் கட்டாயமாக கொடுக்க வேண்டும்.
எனவே குழந்தைப்பெற்ற பெண்கள் பார்த்து, பார்த்து உணவை சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சில உணவுகள் நாம் தவறுதலாக எடுத்துக்கொள்ளும் பொழுது குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். அந்த வகையான உணவுகளை பார்க்கலாம்.
காபி : காபி பலருக்கும் பிடித்த ஒரு உணவு, அதிலுள்ள கஃபைன் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது, நீங்கள் குடிக்கும் காபியில் இருக்கும் கஃபைன் தாய்ப்பால் சுரப்பில் கலந்து, குழந்தைக்கு செல்லும் போது குழந்தைக்கு எரிச்சலை உண்டாக்கும்.
அதுமட்டுமின்றி குழந்தையின் தூக்கத்தையும் அதிகம் கெடுக்கும். ஒரு சில குழந்தைக்கு பற்கள் முளைக்கும் பொழுது அவை கருப்பாக ஆரமித்து விடும்.
மது : ஒரு சில பெண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது, கர்ப்பகாலத்தில் இருந்தே மது அருந்துவதை விட்டுவிடுவது நல்லது,
பதப்படுத்தப்பட்ட உணவுகள் : பதப்படுத்தப் பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது, அதாவது குழந்தை பெற்ற பின் மீன், சிக்கன் மற்றும் மட்டன் போன்றவற்றை மார்கெட்டிற்கு சென்று வாங்கி வந்து சமைத்து சாப்பிடலாம். சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் பதப்படுத்தப்பட்ட சிக்கன், மட்டன், மீன் களை சமைத்து சாப்பிடக்கூடாது.
காரம் : சிலவகையான கார உணவுகளை தவிப்பது நல்லது, பச்சை மிளகாய், ரெட் சில்லி, இதில் சமைத்த உணவுகளை சாப்பிடும் பொழுது, செரிமானத்தை அதிக பாதிக்க கூடும்.
மேலும் வயிற்று எரிச்சல், உப்பசம் போன்றவற்றை ஏற்படுத்தும் , மேலும் ஒரு சில குழந்தைகள் குடித்த தாய்ப்பாலை வாந்தியாக எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
காய்கறி : பீன்ஸ், முட்டைகோஸ் போன்றவை வாய்வு தொல்லை அதிகரிப்பதால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
சீஸ் மற்றும் தயிர் குழந்தைக்கு வயிற்று உப்பிசம் மற்றும் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் தொடர்ந்து படித்திடுங்கள்..