கர்ப்பிணி பெண்கள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா..? கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு..!!
கர்ப்பகாலம் என்பது மிக முக்கியமான காலம் இந்த சமயத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு தான், நம்மையும் கருவில் உள்ள குழந்தையையும் ஆரோக்கியமாக வைக்கும். ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு சில உணவுகள் குறித்து சந்தேகம் இருக்கும் அதில் ஒன்று தான்.
கர்ப்பகாலத்தில், கர்ப்பிணி பெண்கள் சீதாப்பழம் எடுத்துக்கொள்ளலாமா..? வேண்டாமா என்று அதுகுறித்து பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் பசியின்மை, குமட்டல் மற்றும் பசி, மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பிரசவ வலியை குறைக்கவும் உதவும்.
ஆனால் இதை சாப்பிடுவதால் சில பக்க விளைவுகளும் ஏற்படுமா என்று கேட்டால். உடல் எடை, உயரம் மற்றும் மருத்துவ வரலாறு போன்றவற்றிற்கு சீதாப்பழம் ஏற்றது. உங்களின் மருத்துவரை ஒருமுறை ஆலோசித்து விட்டுக்கூட சீத்தாப்பழம் எடுத்துக்கொள்ளலாம்.
அதன் நன்மைகள் :
* வைட்டமின் B6 இருப்பதால் குமட்டல் நிற்பதற்கு உதவும்.
* இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
* அதில் இருக்கும் மெக்னீசிய சத்து மன அழுத்தத்தை குறைக்கும்.
* இதில் இருக்கும் சிட்டாஃபாலை எடுத்துக்கொள்வதால், மெக்னீசியம் தாதுக்கள் உடல் தசையை எளிதாக்கி இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.
* சீத்தாப்பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றிவிடும்.
* சீத்தாப்பழத்தில் இருக்கும் சிட்டாஃபாலில் குழந்தை பிறப்புக்கு முன் ஏற்படும் வாய்ப்புண்கள் வராமல் தடுக்கும்.
* இவை குளிர்ச்சித்தன்மை நிறைந்ததால் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தாமல் தடுக்கும்.
முக்கிய குறிப்பு :
* ஆனால் பழுக்காத சீத்தாப்பழத்தை சாப்பிடக்கூடாது, இது செரிமானத்தை பாதிக்கும்.
* வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பழங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. காரணம் இதில் இருக்கும் குளிர்ச்சி அதிகமானால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..