காரைக்குடி முத்து மாரியம்மன் கோவில் திருவிழா..!!
காரைக்குடி மாவட்டத்தில் உள்ள நல்ல முத்து மாரியம்மன் கோவிலில்.., மே 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று காலை பால் குடம், நெருப்புச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் தீப ஆராதனையும் நடைபெற்று வருகிறது.
இந்த பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுக்கும் திருவிழா கீழ ஊரணி பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மாரியம்மன் கோவில் வந்து சேர்ந்தது, அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அன்று மாலை அம்மன் வீதி ஊர்வலம் வந்து காட்சிக்கொடுத்தார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post