Jyoti Malhotra kept in touch with Pak agents
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, இந்தியா – பாகிஸ்தான் போரின் போது கூட அந்த நாட்டு உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Jyoti Malhotra kept in touch with Pak agents
ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யு டியூபில், ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சமீபத்தில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாற்றிவரும் டேனிஷ் என்பவரை உளவு பார்த்ததாக இந்தியா வெளியேற்றியது. அவருக்கும், ஜோதி மல்ஹோத்ராவுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் செல்வதற்கு, டேனிஷ் உதவியுடன் கடந்த 2024ஆம் ஆண்டு விசா பெற்றுள்ளர். Jyoti Malhotra kept in touch with Pak agents
பாகிஸ்தானின் லாகூர், ராவல்பிண்டி, பரூக்காபாத் ஆகிய இடங்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளர். டேனிஷ் உதவியால், ஜோதி மல்ஹோத்ரா ஒரு வி.ஐ.பி.,யை போன்று பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு 2024 ஏப்ரலில் சென்று திரும்பிய இவர், அதே ஆண்டு ஜூன் மாதம் சீனாவுக்கு பயணித்துள்ளார். இதனால், அவர் மத்திய உளவுப்பிரிவின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டார். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஜோதி மல்ஹோத்ராவை ஹரியானா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரின் அனைத்து மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்து, ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
ஜோதி மல்ஹோத்ரா கைது பற்றி நேற்று ஹிசார் மாவட்ட எஸ்.பி., செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: Jyoti Malhotra kept in touch with Pak agents
மத்திய உளவு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில், நாங்கள் ஜோதி மல்ஹோத்ராவை கைது செய்தோம். பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள், சில சமூக வலைதள பிரபலங்களை தங்கள் நாட்டுக்காக பணிசெய்ய வைக்க முயற்சிக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்தி தங்களுடைய கருத்துகளை பரப்புகின்றனர்.
ஜோதி மல்ஹோத்ராவின் வருமானமும், அவர் மேற்கொண்ட பயணச் செலவுகளும் முரண்பாடாக உள்ளன. ஜோதி மல்ஹோத்ரா, 2023 முதல் பாகிஸ்தானுக்கு பலமுறை பயணம் செய்துள்ளார். இதற்காக, அவருக்கு பண உதவி வழங்கப்பட்டிருக்கலாம். Jyoti Malhotra kept in touch with Pak agents
பஹல்காம் தாக்குதலுக்கு பின், இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடந்த சமயத்திலும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன், ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்துள்ளார் என்று அவர் கூறினார்.
போலீசாரின் இந்த குற்றச்சாட்டுக்களை ஜோதி மல்ஹோத்ராவின் தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “என் மகள் எந்த தவறும் செய்யவில்லை என்று என்னிடம் கூறினார். அவர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
ஒடிஷா யு டியூபரிடமும் விசாரணை!
ஜோதி மல்ஹோத்ரா சில மாதங்களுக்கு முன்பு ஒடிஷாவுக்கு பயணம் செய்துள்ளார். அவருடன் புரியைச் சேர்ந்த பெண்ணும் பயணித்துள்ளார். அந்த பெண், தனியாக ஒரு யு டியூப் சேனல் நடத்துகிறார். ஜோதி மல்ஹோத்ராவைச் சந்தித்த பின், அந்த பெண்ணும் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இந்த தகவலை, ஒடிசா போலீசார் ஹரியானா போலீசாருக்கு வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் அந்த பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.