கணவன்-மனைவி சண்டை தீர இதை மட்டும் பாஃளோ பண்ணுங்க..!!
மனைவி மார்களுக்கு சில அறிவுரைகள் :
* கணவரிடம் எந்த வேலையாவது சொன்னால் அதில் குறை கூறாதீர்கள். அவர்கள் நீயே செய்துகொள் என்று நழுவி விடுவார்கள். சொத்தை கத்தரிக்காய் ,முற்றிய வெண்டைக்காய் வாங்கி வந்தாலும் வாய் திறக்காதீர்கள் நாளடைவில் நல்லதை தேர்ந்தெடுக்க பழகிடுவார்கள்.
* உங்கள் கணவர் பசியோடு வீட்டிற்கு வரும் போது, உணவு பரிமாறாக் கற்றுக்கொள்ளுங்கள்.., அதை விட்டு பசியோடு வருவர்களிடம் சண்டையிட வேண்டாம்.
* எப்போதும் அம்மாவீடு, உடன் பிறந்தவர்களின் பெருமையை மட்டும் பற்றி பேசாதீர்கள்.
அதுபோல் மாமியார் வீட்டைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்காதீர்கள். இருவரிடமும் சண்டை தான் அதிகரிக்கும்.
* குடும்பச் செலவுக்காக இருந்தாலும் கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்காதீர்கள்.சில நேரங்களில் பொறுப்பு உங்கள் தலையில் விழுந்துவிடும்.
* போன் பேசினால் யார் என்ன என்று கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். தும்பு உங்களிடம் இருக்கிறது.தைரியமாக இருங்கள்.
* உங்கள் தேவைகளை அதிகாரமாக கேட்காதீர்கள் அன்பாக கேளுங்கள் உடனே கிடைக்கும்.
* உங்கள் கணவரின் அழகு மற்றும் குணத்தை ரசித்துப் பாராட்டுங்கள். அவர்கள் மீது இருக்கும் பிழைகளை அன்போடு எடுத்துக் கூறுங்கள்.
* கணவன் கோபப்படும் போது உங்கள் கருத்தை சொல்லி நீங்களும் கத்தாதீர்கள்.அமைதியாக இருந்து விட்டு சரியான நேரத்தில் வலிமையாக உங்கள் கருத்தை சொல்லுங்கள் பலன் இருக்கும்.
பெண்கள் வெளிக்காட்டும் அன்பு பட்டம் போன்றது எவ்வளவு தூரம் சென்றாலும் தெரியும் ஆனால் ஆண்கள் வெளிக்காட்டும் அன்பு நூல் போன்றது தூரம் செல்ல கண்ணுக்குத் தெரியாது. ஆனால் எப்போதும் உறவுகளை உயர்த்தி அழகு பார்க்கும்.
ஒரு குடும்பம் என்பது அழகான குருவி கூடு. உறவுகளிடம் விட்டுக் கொடுத்தால் உறவுகளுக்குள் பிரிவு வராது.
-வீர பெருமாள் வீர விநாயகம்