குழந்தைங்க கிட்ட கோவத்துல எதையாவது பேசுனா கடைசில அது இப்படி தான் முடியும் போல..? குட்டி ஸ்டோரி-17
ஒரு அப்பாவும், பையனும் காட்டுக்குள்ள நடந்து போயிட்டு இருகாங்க விறகு கட்டைய வெட்டி வீட்டுக்கு கொண்டு வரலாம் அப்படினு போறாங்க. போன உடனே கட்டவெட்ட ஆரம்பிக்கறாங்க, அப்பா வந்து பையன் கிட்ட சொல்லுறாரு கட்டைய வெட்டி தர நீ வரிசையாக அடிக்கி வைச்சிரு அப்படினு சொல்லுறாங்க.
அவரும் கட்டைய வெட்டியே இருக்காரு பையனும் அடிக்கி வச்சிட்டேயே இருக்க, பக்கத்துல வந்து ஒரு ஆறு போகுது, அந்த பையன் என்ன பன்றான் , அப்பா இந்த ஆறு எங்கப்பா போகுது அப்படினு கேக்குறான்…
அவங்க அப்பா என்னபன்றாரு கட்டைய வெட்டுற “டென்ஷன்ல” ஆ நேரா நம்ப வீட்டுக்கு தான் போகுது அப்படினு சொல்லுறாரு. அதுக்கு அப்புறம் அவ எந்த கேள்வியும் கேக்கல, அப்பாவும் கட்டைய வெட்டி முடுச்சிட்டு வெளிய வந்து வா போலாம் அப்படினு சொல்லுறாரு
ஒரு நிமிஷம் நில்லு சேத்து வச்ச கட்டையல எங்கனு கேக்குறாரு, நான் எல்லாமே ஆத்துல தூக்கி போட்டுட்டன் அப்பா, நீங்கதானே சொன்னிங்க ஆறு நம்ம வீட்டுக்கு போகுதுனு அதான், நம்ம எதுக்கு தூக்கிட்டு போகனும்..
ஆத்துல போட்ட நேரா வீட்டுக்கு போயிடும் வீட்டுல போய் எடுத்துக்கலாம்ல அப்பா..
இதுல இருந்து நம்ப புரிஞ்சுக்க வேண்டியது ஒன்னு தான் நண்பா குழந்தைங்க கிட்ட தெளிவா யோசிச்சு பேசணும் , கோவத்துல எதையாவது பேசுனா அது இப்படி தான் முடியும்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..