தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்பதால் இன்னும் 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 18 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லை என்றும், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதால் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.