கண் திருஷ்டி விலக வீட்டில் இதை செய்தாலே போதும்…!!
கண் திருஷ்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எப்பொழுது இந்த கண் திருஷ்டி ஏற்படும், யாரால் உண்டாகும் என்பதெல்லாம் நாம் அறியமுடியாது. இது நம்மை ஒருவர் பார்க்கும் பார்வையை பொறுத்தும் அவர்களது எண்ணங்கள் பொறுத்தும் அமைவதே கண் திருஷ்டி என சொல்லுவார்கள்..
இந்த கண் திருஷ்டியால் ஏகப்பட்ட சிக்கல்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தும்., இதனால் நமக்கு சில சமயங்களில் தீராத சங்கடங்களையும் உருவாக்கி கொடுக்கிறது. அதாவது கண் திருஷ்டியால் உடல் நலம் சரி இல்லாமல் போக கூடும்., அடிக்கடி வீட்டில் சண்டைகள் ஏற்படும்., இந்த கண் திருஷ்டியால் உடல்நலம் பாதிப்பு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் தொடர்ச்சியாக ஏற்படும்..
அப்படியாக இந்த கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாக்க வீட்டில் எளிய முறையில் செய்யும் பரிகாரங்களை பற்றி இதில் படிக்கலாம்.
எப்போதும் வீட்டின் வாசலின் நடுவில் ஒரு சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பூஜை பாத்திரத்திலோ தண்ணீர் ஊற்றி அதில் மலர்களால் அலங்காரம் செய்து அதாவது பூக்களை தூவி வைக்கலாம். இதனால் தீய எண்ணங்களோடு வருபவர்களின் பார்வைகள் அதிலேயே நீங்கி அவர்களுடை கெட்ட சிந்தனைகள் விலகி விடுமாம்..
மேலும், தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் அதிகம் உண்டு. எனவே வீட்டில் வாசப்படியின் ஓரத்திலேயோ அல்லது மொட்டை மாடியிலேயோ பூந்தோட்டங்கள் வைக்கலாம்… இது வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு இயற்கை செடி மற்றும் மண்ணின் வாசம் கெட்ட எண்ணங்களை நீக்கி விடும்.. முடிந்த வரை வீட்டின் வாசல் முன் பூசணிக்காயை கட்டித் தொங்க விடலாம்.
வீட்டு வாசலில் எப்போதும் கடவுளின் புகைப்படங்களை மாட்டி வைக்கலாம்., குறிப்பாக கண் திருஷ்டி விநாயகரை மாட்டி வைத்தால் தடைகள் விலகி விடும் அல்லது கற்றாழையைக் கட்டித் தொங்க விடலாம்.
ஒருவர் மேல் உள்ள கண் திருஷ்டிபோக கல் உப்பு கொஞ்சம் எடுத்து 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டிதுணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி, மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்.
குடும்பத்தில் உள்ளவரின் கண் திருஷ்டிபோக தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும்.
மேலும், வீட்டில் குடும்பங்களோடு சேர்ந்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தாலும் கண் திருஷ்டி விலகும்.