அவர் வேறு அந்த காமாக்ஷி தேவி வேறா என்ன..? மஹாபெரியவா சொன்னது..?
“பார்த்தாயா காமாக்ஷி தரிசனம் செய்தாய், அவள் நீ கேட்டதற்கு மேலேயே கொடுத்து விட்டாள்!” என்றார் பெரியவா.
ஒரு நாள் “பெண்ணுக்குத் திருமணம் செய்ய பவுன் வேணும். என்று பெரியவாளை யாசித்தார் ஒருவர். அவர் ஒரு சந்நியாசி ஆயிற்றே, பவுனுக்கு எங்கே போவார்?” என்று யோசிக்க வில்லை.
அவருக்கு பெரியவா எதைக் கேட்டாலும் கொடுக்கக் கூடிய காமதேனுவாக, கற்பக விருட்சமாகத் தெரிந்தார்.
“காமாக்ஷியைப் போய் தரிசனம் செய்து பிரதட்சணம் செய்து வேண்டிக் கொள். நல்லது நடக்கும். “வழிகாட்டுகிறார் மகான். அதன் படி அந்தப் பெரியவர் காமாக்ஷி கோவில் நோக்கி நடந்த சமயம், பெரியவாவைத் தேடிக் கொண்டு பம்பாயிலிருந்து ஒரு வணிகர் வந்தார்.
ஒரு தட்டில் பழத்துடன் கூட, ஒரு பையில் வைத்திருந்த பவுன்களையும் அடக்கத்துடன் சமர்ப்பித்தார். சந்நியாசிக்கு பவுனும், பணமும் எதற்காக..? என்று சிரிக்கிறார் பெரியவா. அப்படிச் சொல்லக் கூடாது, பெரியவா ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மிகவும் வருத்தமாக இருக்கும். என்று வந்தவர் கெஞ்சினார்.
உடனே பெரியவா, மடத்துப் பையன் ஒருவனை அழைத்து, “ஒருத்தர் பெண்ணுக்குக் கல்யாணம், பணம் வேணும்னு வந்தாரே, அவர் இருக்காரா, ஊருக்குப் போய்ட்டாரா பார்?” என்று அனுப்பினார்.
அவர் ஏன் போகிறார். பெரியவா கிட்ட இருந்து உத்தரவு வரலையே..? “பெரியவா கூப்படறா..” என்ற மொழி அமிர்தமாகக் காதில் விழ ஓடோடி வந்தவரை, அந்தப் பம்பாய்காரருக்குக் காட்டி, “இவர் பொண்ணு கல்யாணத்துக்கு பவுன் வேணுமாம்.., எனக்கென்று எடுத்து வந்ததை அங்கே கொடுங்களேன். என்றார் மடாதிபதி.
வாங்கிக் கொள்ள வந்தவரும், கொடுப்பதற்கு வந்தவரும் அதைக் கேட்டு உருகிப் போனார்கள். பவுனை எண்ணிப் பார்த்து, தேவைக்கு அதிகமாக இருக்கும் பவுனை அடக்கத்துடன் பெரியவா பாதத்தில் வைத்தார் பெண்ணின் தந்தை.
“இது உம் பொண்ணுக்கு நான் தந்ததாக இருக்கட்டும். இதையும் எடுத்துக் கொள். என்று ஆசிர்வதித்து, “பார்த்தாயா..! காமாக்ஷி தரிசனம் செய்தாய், அவள் நீ கேட்டதற்கு மேலேயே கொடுத்து விட்டாள்..” என்றார் பெரியவா.
வீரப்பெருமாள் வீர விநாயகம்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..